பேய் பசி அன்று. அரக்க பரக்க fridge துழாவியதில், பார்த்து இளித்தது நேற்றைய ரசம். எதை செய்தாலும் மெகாவாக செய்து பழக்கமாகிவிட்டதால், இன்னமும் ரசம் அய்யா தளும்பிகொண்டிருந்தார். ஏனோ, நேற்று இரவு இதை சாப்பிட்டு அல்லது வலுக்கட்டாயமாக தன் வாயில் திணித்த என் அறை நண்பரின் அதீத அமைதி ஞாபகம் வந்து தொலைத்தது. இப்போதைக்கு, மணக்க மணக்க எந்த கன்றாவியும் செய்யும் நிதானம் இல்லாததால், ரசமான அவர் சாதத்துடன் கலக்கபட்டார். அப்பளம் வறுப்போம் என மைக்ரோவேவில் [...]
‘சும்மா’ பகுப்புக்கான தொகுப்பு
Operation Tumbler
Posted in அனுபவம், சும்மா on ஆகஸ்ட் 4, 2007 | Leave a Comment »
கோட்டசாமி
Posted in அனுபவம், சும்மா on ஆகஸ்ட் 2, 2007 | 2 மறுமொழிகள் »
கொஞ்சம் நன்றாகவே தமிழ் சினிமா பார்ப்பவராக இருந்தால், உங்கள் பின் மூளையில் கவுண்டமணி என்ட்ரி ஆகியிருப்பார்.இவரை உலுக்கி உலுக்கி கனவை கலைத்து காமெடி செய்திருப்பார்கள். கனவு மேட்டரை, முடிந்தவரை, இரவை தவிர மற்ற நேரத்தில் கண்டு அதற்கான பின் முன் சைட் விளைவுகளை அவரின் ஸ்டீரியோ குரலால் அலற அலற நகைச்சுவை இருந்திருக்கும்.உண்மையில் அது பதறடிக்கும் விஷயமே. கண்ணாடியை மூக்கின் நுனியில் வைத்து, சரியாக குளிக்காமல் ஆராய்ச்சி செய்யும் எந்த ஒருவரும் இதை வியாதி தாங்க என்பார்கள். [...]
ஆவியுடன் ஒரு இரவு
Posted in சும்மா on ஜூன் 27, 2007 | 5 மறுமொழிகள் »
கண்ணம்மா, நான் இத பத்தி கண்டிப்பா எழுதியே ஆகனும்னு சொல்றியா? ஆமாம் எழுதனும். இதுக்கு வேற எதும் சாக்கு சொல்லபடாது.ஆவி எல்லாம் இருக்கா இல்லையான்னு ஒரு முடிவில்லாம, இதயெல்லாம் கற்பனை பண்ணி எழுதறது கஷ்டம்டா. போட்டோ பாத்து கவிதை எழுத தெரியுது இல்ல, அங்க இல்லயா கற்பனை. எல்லாம் வரும், எழுதலாம். ஏன் இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்ட நீ? அப்படித்தான் பண்ணுவேன், எழுத முடியுமா முடியாதா? உனக்கு ஒன்னு சொல்றேன் கேளு, பதிவுலகம் அப்படின்றது அறிவிக்கபடாத [...]
Forward
Posted in சும்மா on ஏப்ரல் 19, 2007 | Leave a Comment »
எப்பொழுதும் forward மெயில்களை பார்த்து விட்டு delete செய்வது வழக்கம். இன்றைக்கு வந்த இந்த கவிதை (கவிதை நடையில் இல்லாவிட்டாலும்), அப்படியில்லாமல், இங்கே பதிய வேண்டும் என தோன்றியது.
கணிணி கனவாண்களேகொஞ்சம் செவி கொடுங்கள்இங்கே சில பேர் உங்களுக்காக காத்து கொண்டிருக்கிறார்கள். இவன்(ள்) எங்க கிட்ட சிரிச்சு பேசியே பல நாளாகுதுஉன் அப்பா, அம்மா இப்படி.நாம பீச் எப்போ கடைசியா போனோம்னு மறந்தே போச்சுஉன் மனைவி.அப்பா, நீ என் கூட வெளயாட வர வேண்டாம், என்க்கு சாதமாச்சும் ஊட்டி [...]