Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

WALL-E

Pixar studios எடுத்திருக்கும் அடுத்த படமிது.

2 வருடங்களுக்கு முன், நான் கலிபோர்னியாவில் இருந்த போது என் அலுவலகம் இருந்த இடம் Pixar studios இருந்த தெருவிற்கு இரண்டாவது தெரு. பஸ்ஸில் போகும் போதெல்லாம், Pixar அனிமேட்டர்கள் பயணம் செய்வது வழக்கம். அப்படி பயணம் செய்த ஒருவர் 2 வருடங்களுக்கு முன் சொன்ன விஷயம், ‘நாங்கள் இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் project பெயர் WALL-E’. கிட்டதட்ட எனக்கு தெரிந்தே 2 வருடங்களுக்கு மேல் உழைக்கபட்ட ஒரு படம்.

படம் ரிலீஸ் ஆன முதல் நாளே (கூட்ட நெரிசலில்லாமல்) பார்த்தேன். தமிழ் பட வாசனை குழைத்த ஒரு அமெரிக்க ஆங்கில (hollywood) படம். மனிதர்களில்லாமல், வரைபடங்கள் சினிமாவாக்கபட்டிருந்தது. புதிதொன்றுமில்லை. ஆனால், பழக்கபட்ட அனிமேஷனை எப்படியாவது ஜனரஞ்கமாக்கபடவேண்டிய அவசியம் இப்போது. முற்காலம் போல், வெறும் சின்ரல்லா வைத்து பிலிம் ஓட்டமுடியாத காலமிது. The Enchanted அப்படி ஒரு படம்தான். ஆனாலும், அதில் real-life vs animation-life வித்தியாசம் காண்பிக்கபட்டது.

Wall-E. கொஞ்சம் கூட குறை சொல்ல முடியாத ஒரு படம். வேண்டிய அளவுக்கு Hollywood மசாலா தெளிக்கபட்டு, ஒழுங்காக வார்த்தெடுக்கபட்டுள்ளது. சமீப காலமாக, சினிமா தீவிர ரசிகனாக இருந்த நானே, பல படங்களை பார்க்க போய் தூங்கி வழிந்தேன் (தசாவதாரம் உள்பட). Wall-E அந்த குறையை கொடுக்கவில்லை. முதல் முப்பது அல்லது நாற்பது நிமிடங்களில் இருந்த மெலிதான தொய்வை தவிர, படம் சரியான விர்ர்ர்ர்.

முதலில் ஒரு இயந்திரத்தை (Robot) பேச வைத்து, அதற்கு மனிதர்களுக்குண்டான பாவங்களை (காதல் கூட விடபடவில்லை) கொடுத்ததெல்லாம், சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தால், சின்ன பிள்ளைதனமாக கண்டிப்பாக படும். ஆனால் Pixar வரலாற்றை திரும்பி பார்த்தால், அதற்கு பலமான அஸ்திவாரம் போடபட்டுள்ளது தெரியும். இவர்களின் Toy Story, A Bugs Life, Monsters Inc., Finding Nemo, Cars, Ratatouille எல்லாமே பெரும்பாலும் மனிதர்கள் கம்மியாகவும், non-மனிதர்கள் அதிகமாகவும் வைக்கபட்ட படங்கள் தான். அதில் கைகொடுத்த வெற்றி formula தான் Wall-E.

இதில் (அப்பாவி)ஹீரோ இயந்திரத்தின் பெயர் தான் Wall-E (Waste Allocation Load Lifter Earth-Class). ஹீரோயின் இயந்திரத்தின் பெயர் Eve (Extraterrestrial Vegetation Evaluator). இவர்களுக்கிடையே காதல் மலர்ந்து, பல பல கோள்/வாண்வெளி இடையுறுகளுக்கு மத்தியில் ஒரு சின்ன செடியை (படத்தின் மிக முக்கியமான விஷயம் இந்த செடி. இதன் பின் இன்றைய கால பயங்கரம் கொஞ்சமாக சொல்லபட்டுள்ளது) பூமிக்கு கொண்டுவந்து சேர்க்கும் வேலையை ஜோடியாக செய்து முடிப்பது தான் கதை.

கதை ஒரு வரியாக இருந்தாலும், அதன் திரைக்கதை அசத்தலோ அசத்தல். பூமியில் துவங்கும் கதை, வான்வெளிக்கு பறந்து, அங்கே சில பல action block, romance block, comedy block எல்லாம் போட்டு, மறுபடியும் பூமிக்கே திரும்பி u-turn அடிக்கும் திரைக்கதை.

படத்தை பார்க்கும் போது, சில தமிழ் படங்களின் காட்சிகள் உங்கள் கண் முன் வர ஏகபட்ட சாத்தியங்கள் உண்டு. எனக்கு கண் முன் வந்தது, மூன்றாம் பிறை மற்றும் பல நூறு மசாலா படங்கள்.

வாத்தியார்

கொஞ்ச நாளாய் தமிழ் தெரிந்தவர்களிடம் எல்லாம் ‘சுஜாதா இறந்துட்டாரே தெரியுமா’ என்று கேட்டபடிக்கே இருந்தேன். சொன்னவர்கள் அத்தனை பேரும் சுஜாதாவை ஏதோ ஒரு ரூபத்தில் பரிச்சயபடுத்திக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் கரையெல்லாம் செண்பகப்பூ சொல்ல, இன்னொருவர் ரோபோ பற்றி சொல்ல, மற்றொறுவர் நகரம் பற்றி சொல்ல, எங்கும் பாரபட்சமில்லாமல் நிறைந்திருந்தார்.

எனக்கு முதன் முதலில் சுஜாதாவை அறிமுகபடுத்தியது, அப்பா. அப்போது வந்திருந்த ரத்தம் ஒரே நிறம் தொடர். வாரபத்திரிக்கையில் வந்த தொடரை எல்லாம் மொத்தமாக பைண்ட் செய்து வைத்திருந்தார். படிக்கும்போது கிட்டதட்ட 14 வயதிருக்கும். வெறும் ஆனந்த விகடன் படித்த நேரத்தில் முதல் நாவலாக படித்தது இந்த ரத்தம் ஒரே நிறம். அப்போதைய படித்ததின் மனநிலை இப்போதைக்கு நியாபகம் இல்லை. இருந்தாலும், அப்பாவின் TVS Champன் மீது உட்கார்ந்து கொண்டு ஆடிகொண்டே பல மணி நேரம் படித்தது நிழலாடுகிறது. சுஜாதா ஈர்ப்புவிசை அப்போது ஆரம்பித்தது. பிறகு நீண்ட காலம் தொடரவெல்லாம் இல்லை. ஆனால் சுஜாதா என்ற அறிமுகம் இருந்தது.

பிறகெல்லாம் எல்லாரும் போல நானும் கற்றதும் பெற்றதும், சீரங்கத்து தேவதைகள், சில சிறுகதைகள், சில நாவல்கள் படித்ததுண்டு.
எந்த வார்த்தையிலும் அல்லது படைப்பிலும் மிதமிஞ்சிய செண்டிமெண்ட் இருக்காது. எதையுமே maturedஆக பார்க்கும் ஒரு எழுத்து. இவரின் எழுத்துக்களில் பெரிதாய் மேதாவித்தனம் இருக்காது. ஆனால், அதை லேசாக தொட்டுவிட்டு போகும் பலம் இவருக்கு உண்டு.
வைரமுத்துவில் தொடங்கிய என் மெலிதான புத்தக பழக்கம், அடுத்ததாக நகர்ந்தது இவரின் பக்கம் தான். சுற்றி சுற்றி எல்லாரும் இவரையே பரிந்துரை செய்தால் வேறேன்ன செய்துவிட முடியும்.
ஓரளவுக்கு விபரம் தெரிந்த நேரத்தில் நான் படித்தது “ஆ” நாவல். இதன் ஆதாரம் எல்லாம் ஒரு சின்ன வியாதி. மூளைக்குள் நடக்கும் சில விஷயங்கள். ஒரு எழுத்தாளராக இவருக்கு அதில் இருந்த கதைக்களன் இது மட்டுமே. அதன் அறிவியலை விளக்காமல், கதையோடு கொஞ்சம் கொஞ்சமாய் ஒட்டி வெட்டி பரபரப்பு கூட்டி இருப்பார். அதன் பிறகு, இவரின் எந்த நாவலாக இருந்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் படித்திருக்கிறேன்.
கமல், அவரின் சுஜாதா இரங்கலில் சொல்லி இருந்த விஷயம் சத்தியமானதாக பட்டது. சினிமாவில் சுஜாதா, என்பது ஒரு சமரசம் மட்டுமே. எழுத்தில் இருந்த அத்தனை பட்டாசுகளும் திரையில் வெளிபட்டதாக எனக்கு தெரியவில்லை. சில படங்களை பார்த்த பின்பு, இது சுஜாதா என்று சொன்னபின்பே தெரிந்தது. இவருக்கான களம் இல்லை சினிமா, எனக்கு தெரிந்தவரை. அல்லது, இவருக்கு தீனி போடும் அளவுக்கு நம் சினிமா இன்னமும் நகர்ந்து விடவில்லை.
எழுத்தாளனுக்கு எப்போதும் தேவை கவனம். ஒவ்வொரு விஷயமும் கவனிக்கபட்டால் மட்டுமே எழுத்தாக்க முடியும். இந்த பதிவாளரின் சுஜாதா பற்றிய பதிவு அதை தெளிவாக சொல்லும்.
அவரின் உடல்நிலை சரியில்லாத விஷயத்தையே நகைச்சுவையாக சொன்ன மனிதர் இவர். ரொம்ப கஷ்டப்படாமல் சுவாசம் நிறுத்தி இருப்பார்.
மரணித்தவர்கள் ஒரே ஒரு முறை எழுத ஒரு வாய்ப்பு அமைக்கபட்டிருந்தால், இவருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கபட்டு எழுதப்படும் அந்த இரண்டு பக்க கட்டுரை படிக்க கண்டிப்பாக ஆவலாயிருப்பேன். இவரை விட மரணத்தையும் போகிற போக்கில் சொல்லிவிட யாராலும் முடியாது.

ஆதி

(கொஞ்சமே (பெரிதாகிவிட்ட)சிறுகதை முயற்சி)
ஆடி மாதத்திலும் அந்த கல்யாண மண்டபம் களை கட்டியிருந்தது. கல்யாண களை தான். எல்லாம் ரகுவின் பிடிவாத தனத்தால். எப்போதும் பர பர குணம் அவன். சொல்வதை கேட்காத குணமும் சேர்ந்து கொண்டது. நல்லவிதமாய் NASAவில் (ரகு செல்லமாக Rug அமெரிக்காவில்) வேலை செய்வதால் அவன் அப்பாவும் இவனிடம் பெரிதாய் அலட்டிகொள்வதில்லை. ரகுவை அரட்டி புரட்டினால் எதிரில் இருப்பவர் நிலைமை பரிதாபம் தான். இப்போதைக்கு சஷ்டியப்த பூர்த்தி செய்யறதெல்லாம் பழசாகி போச்சு என்று சொல்லியும் கேட்காமல், அப்பா பிறந்த நாளிலேயே ஏற்பாடு செய்தான். அவன் சொன்ன காரணம் கொஞ்சமாய் பயமுறுத்தினாலும், இவன் நினைத்ததை யாரும் தடுத்தாட்கொள்ள முடியாத நிலை. கல்யாணமும் முடிந்திருக்கவில்லை. ரகு மெத்த படித்ததை நினைத்து இப்போது அப்பாவுக்கு கவலை. இல்லையென்றால் ஏதோ Nano technology, Energy technology என்று சொத்தை வேலையில் மிதமான சம்பளத்தில் காலம் தள்ளியிருப்பான். அதிகமாய் படித்து, அதிகமாய் வேலை செய்து நல்ல பெயர் வாங்கி, அமெரிக்க குடியுரிமை பெற்று, இப்போது Voyager Mars Programல் பணி.

60ம் கல்யாணம் அமோகம். ரகு பெரும்பாலும் ‘நன்னா செஞ்சுட்டேள். உங்க அப்பா, அம்மாவுக்கு மனசெல்லாம் நெறஞ்சு போயிருக்கும். எனக்கும் தான் வந்து பொறந்திருக்கே ஒரு திராபை’ போன்ற டயலாகுகளை கேட்டவாறே ஓடி ஓடி களைத்து போனான். நடுவில் மேடையில் பாடிகொண்டிருந்த பாடகர் வேறு, இவனை பாட அழைக்க, ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ பாட்டை தப்பு தப்பாக முச்சிரைக்க பாடி விட்டு, மறுபடியும் வேகபடுத்தி வேலை செய்தான்.

ரகுவின் அப்பா இப்போது வழக்கம் போல கண்ணீருடன், போகாத இங்கயே இருந்துடேன். ரகு – இல்லப்பா, உங்களுக்கு தெரியும். Voyager சாதாரண விஷயமில்ல. எனக்கு பெருசா பேச நேரமில்ல. நான் Houston போய்ட்டு உங்கள கூப்பிடறேன். நான் டிசம்பர் 30 கெளம்பறேன். அப்பாவும் அம்மாவும் மறுபடியும் அவன் செய்ய போகும் பயணத்தை நினைத்து பார்க்க விரும்பவில்லை. இவர்கள் இருக்கும் வருடம் 2080. கலாச்சாரங்கள் பெரிதாய் மாறுபட்டுவிடவில்லை, எல்லோரும் எதிர்பார்த்தது போல்.

டிசம்பர் 30. ஆனமட்டும் உலக ஜனங்கள் எல்லோரும் அவர்களுடன் உள்ள தொலைகாட்சியை பார்த்து கொண்டிருந்தார்கள், ரகுவின் அப்பா அம்மா தவிர. காரணம் Voyager பல முறை Nasaவில் தோல்வி அடைந்த, கிடப்பில் போடபட்டு திரும்ப பல முறை எடுக்கபட்ட ஒரு முயற்சி. இந்த முறை கண்டிப்பாய் Marsல் கால் பதிக்கும் சாத்தியம் உண்டு. இதற்கு முன்னால் unmanned mission & animal based missionம் வெற்றி பெற்ற நம்பிக்கை. ஆனால் மொத்தமாய் 4 வருட கால ஆராய்ச்சி. ரகு பூமியின் இலக்கில் இருந்து பல தூரத்தில் இருக்க வேண்டிய கட்டாயம். 10 பேர் அடங்கிய கூட்டணி என்றாலும், போகும் இடம் Mars என்பதால் இத்தனை சிந்தனைகள்.

(பூமியில் இப்போது தேதி, டிசம்பர் 31 2081) ரகு இப்போது இருப்பது Mars. அலட்டிகொள்ளாமல் எல்லோரும் வேலையை பார்த்தார்கள். இவர்களின் ஆராய்ச்சி 5 பூமி மாதங்கள். மனிதனின் உடனடி தேவைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யபட்டு, கன கச்சிதமாக ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. ரகுவின் தேடல் உச்ச கட்ட நிலைக்கு போக, அவனின் ஆராய்ச்சி சொன்ன நிலையை தாண்டி போய்கொண்டிருந்தது. அவனின் ஒரே கோட்பாடு, Mars முன்பே மனித இனம் அல்லது அது போன்ற ஒன்றை கொண்டிருந்தது என்பது தான். இதை விளக்கி சொல்லி பல நேரங்களில் கஷ்டபட்டிருக்கிறான். இப்போது சொல்லாமல் அதற்கான வேலைகளில் இறங்கி விட்டான். Marsல் சுற்றி திரிய சூரிய வெளிச்சத்தை எனர்ஜியாக பயன்படுத்தும் வாகனம் எல்லோருக்கும் கொடுக்கபட்டிருந்தது.

ரகுவின் மனது சொன்னதெல்லாம், முதலில் தண்ணீர் இருக்கும் இடத்தை தேடு, பிறகு மனித இனத்தின் சுவடை தேடலாம் என்பது தான். சுற்றி திரிந்து கண்டுபிடித்துவிட்டான். அங்கே தன் கூட்டாளிகள் இருந்திருக்கவில்லை. அவனுக்கு தண்ணீரின் குணம் சற்றே பயமுறுத்தியது. இதுவரை வரையறுக்கபடாத ஒரு நிறத்தில் இருந்தது. பயத்தின் உணர்வால், தண்ணீரை தொட யோசித்தபடியே, தன் ஆராய்ச்சியின் போது படித்த Mars minerals தன்மை பற்றியெல்லாம் தேவையில்லாமல் யோசித்தபடி, நேரம் ஓடிகொண்டே இருந்ததால், வேறு வழி இல்லாமல் அதை experiment’காக கைகள் படாமல் எடுத்து வைத்த அடுத்த நிமிடம், இடது பக்கத்து காது சுத்தமாய் அடைக்கபட்ட ஒரு உணர்வு.

கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை இழக்கும் நிலை. சில நிமிடங்கள் தான். அவன் இப்போது கண்கள் திறந்தபடிக்கே மயங்கினான். ஆனால், இது எப்போதும் வரும் மயக்கமில்லை. கண் முன் மஞ்சள் வண்ணங்களோ, தலை சுற்றலோ இல்லாத மயக்கம். Mars வேலையை காட்ட ஆரம்பித்து விட்டதோ, ஆனாலும் மூளை எப்போதும் போல் சிந்திப்பதில், மொத்தமாய் குழம்பி போனான். இப்போது அதிலும் நிசப்தம். தன்னுள் ஏதோ ஒன்று இயங்கியது மட்டும் தான் அவன் நினைவில் இப்போது இருப்பது. எப்போதும் நம்பாத அசிங்கமான alien பற்றியெல்லாம் நினைக்க அவன் மூளை இடம் கொடுக்கவில்லை.

கண் மட்டும் இயங்க, இப்போது அவன் முன் எந்த மாற்றமும் இல்லாத ஒரு மனித உருவம். உருவம் மட்டுமே மனிதத்தனமாக இருக்க, தோலின் நிறம் அதே வரையறுக்கபடாத தண்ணீரின் நிறம். பெரிதாய் கிழியாத உதடு. மொத்தமாய் ஒரு சின்ன O. கைகள் சமானமில்லாத நிலை. கால்களும் கைகளும் கீழே ஊனிகொண்டு, சற்றே குரங்கின் வாடிக்கைகள். ரகு எதை எதையோ முடிச்சு போட்டுகொண்டிருந்தான். எண்ணங்கள் ஒரு சீராக இல்லை. ஆனாலும் அதன் சைகைகள் புரிந்து கொள்ளும்படியாக இருப்பது போல் உணர்ந்தான். அது இவன் முன் சிறிது இடைவெளியில் வந்து நின்றபோது, தேவை இல்லாமல் புளித்து போன தோசை மாவின் வாசனை நியாபகம் வந்து தொலைத்தது. அது இவனை தொட முயற்சிப்பது இவனுக்கு புரிந்துவிட்டது. ஓட முயற்சிக்கவில்லை இவன். தொட்ட நிமிடம், தீடீரென சிறு உருவமாக தண்ணீரில் நீந்தும்படிக்கு ரகு மனநிலை. பாதி குழம்பிய அவன், இப்போது முழுதாய் குழம்பி போனான். ஆனால் எங்கோ மூலையில் நான் நினைத்தது சரி என்று அடித்துகொண்டிருந்தது.

இப்போது அது இவனை விட்டு தூரத்தில். பெரிதாய் நகர்ந்துவிட முடியாத நிலை. அப்போது தான், குரல் எழுப்பி இருக்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது. ஆனாலும், அது இவனிடம் எதையோ சைகை காட்டிய லேசான நியாபகம். கையை கீழே முட்டு கொடுத்து எழுந்திருக்கும் போது, உள்ளங்கையில் சில்லிட்டது. அங்கே, மஞ்சளும் சிவப்பும் கலந்த வடிவமில்லா பெரிய கல். அப்படிபட்ட வெப்பநிலையில் கல் சில்லிடுவது வித்தியாசபட்டது. கொஞ்சமும் யோசிக்காமல் எடுத்துவிட்டான். எடுத்தவுடன் தான், scan செய்ய மறந்தது உறைத்தது. இருந்தாலும், என்ன தான் இருக்கிறது என பார்க்க அதில் பல கிறுக்கல்கள்.

(பூமியில் இப்போது தேதி, மே 31 2082) ரகுவுக்கு இப்போது பல பட்டங்கள். Mars மண் தொட்ட சில யுக புருஷ புருஷிகளில் இவனும் ஒருவன். இந்தியாவில் இவன் பெயரில் NH திறந்துவிட்டிருந்தார்கள். ரகுவுக்கு மட்டும் அந்த கல்லின் ஆராய்ச்சி முடிவு பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. மேலும் அதன் கிருக்கல்கள்.

3 மாத இடைவெளி. ரகு இப்போது மொத்தமாய் வெளியே விடபட்டான் (Mars கதிர்வீச்சுக்கள் பூமியில் பாய்ந்துவிடாமல் இருக்க, 3 மாத observation period). அப்பா, அம்மாவிற்கு தன் குரலை deliver செய்துவிட்டு, லேபிற்கு ஓடினான். சம்பிரதாயங்கள் முடிக்கபட்டு, அவன் இப்போது கண்ணாடி பெட்டிக்குள் இவன் கண்டெடுத்த கல்லின் முன் நின்று கொண்டிருந்தான்.

இக்பால் அந்த கல்லை உருட்டி புரட்டி கொண்டிருந்தவன். இராக்கில் இருந்து digitial archaeology படித்த award winning விஞ்சானி இவன். ரகுவிற்கு நல்ல நண்பனாகி விட்டிருந்தான். 1 மாததிற்கு பின், ரகுவிற்கு கிடைத்த செய்தி, அந்த கல் இப்போது இருப்பது சென்னையில், ஆராய்ச்சிக்காக.

சென்னை ஆராய்ச்சி மையம். மெலிதாக oxygen கலந்த குளிர் எல்லோர் முகத்திலும் அறைந்து கொண்டிருந்தது. இக்பாலும் ரகுவும் இப்போது ரகுவின் அப்பா முன். ரகுவின் அப்பா அந்த காலத்து தமிழ் ஆராய்ச்சி செய்தவர். கொஞ்சம் கொஞ்சமாய் கல்லின் கிருக்கல்கள் தமிழ் படுத்தபட்டு கொண்டிருந்தன. Oxygen நிரப்பபட்டிருந்த்தும் முவரின் மூச்சு சில நேரங்கள் பெருத்த இடைவெளியில் வந்து கொண்டிருந்தன. மொத்தமாய் இப்போது கல்லின் கிருக்கல்கள் தமிழ்படுத்தபட்டிருந்தது.

“இந்த கிரகத்தின் கடைசி நிமிட பதிவு. இந்த பதிவு எழுதபட்டிருப்பது எங்கள் மொழியில். எழுதியது ஒரு கடைசி உயிரினம். எழுதபட்ட விதம் – எங்களின் விஞ்சான வளர்ச்சியில் உருவான அழியாத எழுத்து பதியும், எதிலும் எழுதும் கருவி. இந்த கிரகம், இப்போது அழிந்து போக போகிறது. சுற்றிலும் இறந்த வாசனைகள்.

நாங்கள் வளர்த்த விஞ்சானம் எங்களை பால்வெளிக்கு அப்பால் பயணிக்க வைத்தது. எங்கள் கிரகத்தை சந்தோஷபடுத்தியது. ஆனால், பின்னாலேயே அதன் அடங்கா கோபம் எங்களுக்கு தெரியவில்லை. இப்போது நாங்கள் உருவாக்கிய விஞ்சானம், எங்கள் வாழ்க்கையில் ஒன்றாகி, இயற்கை குலைத்து, கிரகம் அழிக்கபட்டு விட்டது. கடல் மட்டங்கள் உயர்ந்து அழிந்து கொண்டிருக்கிறோம்.

எங்களின் பல நூற்றாண்டு வாழ்க்கையும், வான்வெளி பயணத்தின் வளர்ச்சியும், பருவ மாற்றங்களும் எங்களை அடுத்த பக்கத்து கிரகங்களை வாழ்வதற்காக பார்க்க வைத்தது. அதன் பலன், எங்கள் ஜீவன்களில் இரண்டு பேர், சுரியனுக்கு மூன்றாவது இடத்தில், எங்களுக்கு பக்கத்தில் இருக்கும் கிரகத்தில் (பால்வெளியில் உயிரினம் வாழ, எங்கள் கிரகத்திற்கு அடுத்து தகுதியான இரண்டாவது கிரகம் அது) கொண்டு போய் விடபட்டுள்ளார்கள்.

அவர்களுக்கு நாங்கள் இட்ட பெயர் Adam & Eve

சில உலக சினிமா

நேரம் கிடைத்த போதெல்லாம் முடிந்தவரை சோம்பேறியாய் இருந்துவிட்டதன் பயன், உடல் சிறிது பெருத்து போய், whole milk வாங்கியவன் இப்போதெல்லாம் 2% fat only milk வாங்க ஆரம்பித்து விட்டேன். சரி விட்டுபோன சினிமா பார்க்கும் பழக்கத்தை மறுபடியும் ரிப்பன் வெட்டி துவக்கி, atleast, அக சோம்பேறிதனத்தை தள்ளி போட முடிவு செய்து BlockBuster’ல் சேர்ந்தேன். பார்த்த படங்கள் (எல்லாம் பழசு தான்) பற்றி குட்டியாக சொல்ல ஆசை.

Pursuit of Happyness – உண்மை தழுவிய கதை. Hollywood’ன் success formula இது. Will Smith தயாரித்தது மற்றும் நடித்தது. நமக்கு பழகிய இந்திய மத்தியதர வாழ்க்கை. ஆனால் கதை நடப்பது San Francisco. அவ்வளவே தான் வித்தியாசம். Spider Man, Harry Potter எல்லாம் தமிழ் பேசினார்கள், நம் நாட்டில். இந்த படத்தை தமிழ் செய்து வெளியிட்டார்களா என தெரியவில்லை. செய்திருப்பதற்கு வாய்ப்பு குறைவு. சராசரி சினிமா ரசிகனுக்கு தெரிந்த Hollywood படங்களில் இருந்து இது பல காணி தூரம் தள்ளியே இருக்கிறது. பல தரப்பில் ரசிக்கபட்ட ஒரு படம் இது.

Babelகொஞ்சமாய் என்னை திக்குதிக்கென ஆக்கிய படம். இது முதலில் Horror படமில்லை. ஆனால் பயமுறுத்துகிறது. சாதாரண வாழ்க்கையின் அசாதாரண பயங்கள் தான். பிரமாண்டமாய் யோசிக்காமல், எளிமையான script. ஆனால் நிகழ்வுகள் அழுத்தமானவை. தனி தனி கதைகளாய் சொல்லபட்டு வருபவற்றை, கொஞ்சம் கொஞ்சமாய் முடிச்சு போட்டு ஒரே கதை தான் என தெளிவாக்கபடும் ஒரு திரைப்படம்.

L.A. Confidential & The Departed - இரண்டுமே ஒரு வகையில் ஒரு மாதிரி. தங்களுக்குள் (police/gangster groups) தங்களுக்கு தெரியாமல் புகுத்தபட்ட விஷயத்தை கண்டுபிடிப்பது தான். குருதிபுனல், காக்கிசட்டை, போக்கிரி எல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது. நல்ல பர பர திரைக்கதை. Dinner சாப்பிட்டுகொண்டே பார்க்க சரியான படங்கள்.

Bicycle Thief - இது ஒரு பழைய இத்தாலிய திரைப்படம். கடைசி நிமிஷ பன்ச் தான் திரைப்படம். அந்த பன்ச் அழுத்தமானதாய் இருக்க மீதி காட்சிகள். நல்ல வேளையாக போர் அடிக்கும் நிலை வரும் சரியான நேரத்தில் படத்தை முடித்துவிடுகிறார்கள். ஆனால், கடைசி பன்ச் நிஜமாகவே அசத்தல். ஒரு சைக்கிளுக்கு அவ்வளவு மரியாதை அந்த காலத்தில் (1948).

Apocalypto – Mel Gibson’ன் The passion of the Christ பார்த்து தியேட்டரில் ஒரு பெண்மணி கேவிகேவி அழுதது தான் எனக்கு நியாபகம் வந்தது. Apocalypto, Mel Gibson’ன் இரண்டாவது இயக்க முயற்சி. அசாத்திய முயற்சி. Mayan நாகரீகம் தான் கதைக்களம் மற்றும் அந்த மக்கள் தான் கதையில் இருக்கிறார்கள். கொஞ்சமாய் பல தமிழ் பட கதைகளில் வரும் விஷயம் தான். அப்பாவி ஹீரோ, கடைசியில் வில்லனை ரவுண்ட் கட்டி அடிக்கும் மசாலா கதை. ஆனால் இதன் பிரமாண்டம் ஆச்சரியம். இங்கே பிரமாண்டம் graphics அல்லது set கிடையாது. நம் கண் முன் விரியும் Mayan மக்களின் வாழ்க்கை.

Walk the line – ஒரு biography வழி கதை. The beautiful mind, Pursuit of Happyness எல்லாம் இந்த வகையறா. இங்கே Johnny Cash என்பவரின் இசை வாழ்க்கை. பார்க்க பார்க்க எனக்கு முன் சிந்து பைரவி தான் ஓடியது. அச்சு அசல் அப்படியே எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் இரண்டிருக்கும் பெரும்பாலும் நிறைய ஒற்றுமை. வாழ்ந்து, கெட்டு மறுபடியும் வாழ்ந்து விட்ட ஒரு இசைஞனின் வாழ்க்கை அழகாக நெய்யபட்ட படம். படத்தின் கதாநாயகி Reese Witherspoon கொள்ளை அழகு. அவருக்காகவே அவரின் Legally Blonde (2001) அடுத்து subscribe செய்து விட்டேன். முடிந்தவரை ஜொள்ளிகொள்ளத்தான்.

இதெல்லாம் இல்லாமல், சனி ஞாயிறெல்லாம் தியேட்டரில் பார்த்த படங்கள் தனி கணக்கு. முடிந்த்தால் அதையும் எழுத ஒரு எண்ணம்.

2008 முடிவில்…

இந்திய பொருளாதாரம் பின்னி பெடலெடுத்திருக்கலாம். அமெரிக்க ஜனாதிபதியாக Obama முடிசூடியிருக்கலாம். திமுக ஒரு இளைஞரை (அல்லது அப்படி சொல்லபடுபவர்) தலைவராக்கி இருக்கலாம். United Kingtom’ன் தேசிய கீதம் “God save the king” என மாறி இருக்கலாம். அமெரிக்கா ஈராக்கை இடது வலதாக வளைத்த விளையாட்டை நிறுத்தி அடுத்த பெட்ரோலிய நாட்டின் மேல் நோட்டம் வைத்துகொண்டிருக்கலாம். ஜெயித்த மோடி, அத்வானியை ஜெயிக்க வைக்க ஊர் ஊராக தண்டோரா போட்டு கொண்டிருக்கலாம்.
ஆசிய கணினி மக்கள் அமெரிக்காவை சீ இந்த பழம் புளிக்கும் என தற்காலிகமாக திட்டிகொண்டிருக்கலாம். Microsoftம் Googleம் இன்னமும் அதே பங்காளி சண்டையை சிரித்துகொண்டே போட்டுகொண்டிருக்கலாம். மிக பெரிய அளவில் Cyber attack நடந்திருக்கலாம். ரஷ்யா அமெரிக்காவிடம் “நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால்…” என பாடிகொண்டிருக்கலாம். Larry Ellison சுண்டு சுளுவான்களை எல்லாம் அள்ளி தன் பாக்கெட்டில் போட்டு கொக்கரித்து கொண்டிருக்கலாம்.
மணிரத்னம் அடுத்த காதல் கதையை மனதுக்கு இதமாக யோசித்து கொண்டிருக்கலாம். கமலின் தசாவதாரம் தமிழ் சினிமா காணாத தோல்வியை தழுவி இருக்கலாம். சுல்தான் பிச்சிகொண்டு ஓடலாம். ரஹ்மான் ஐரோப்பிய யூனியனில் citizenship வாங்கி இருக்கலாம். ஜோடி நம்பர் 1 சீசன் 3′ல் பிரித்விராஜ் நடுவராகி இருக்கலாம். மோனிஷா சிம்புவின் ஆதர்ஷ நாயகி ஆகியிருக்கலாம். Aamir Khan கஜினியை நம்பி ஏமாந்து போயிருக்கலாம்.
அத்தனையும் யூகம் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு வருடமும் நம் வீட்டு தாத்தா பாட்டி ‘அது என்னமோப்பா, இப்போவெல்லாம் வெயிலும் குளிரும் மனுஷன பொரட்டி எடுக்குது. நாங்க இப்படி எல்லாம் பாத்ததில்ல. என்ன உலகமோ’ என சொல்வது மாற போவதில்லை. நீண்ட வெயில் காலம், நீண்ட குளிர் காலம், உருகும் Artic & Antartic இதெல்லாம் பெரும்பாலும் அடுத்த சில பல வருடங்களில் பழகிவிடும்.
அறிவியலை நம் வாழ்க்கையில் புகுத்திய போதெல்லாம் இதை பற்றி யோசிக்க மனம் மறுத்துவிட்டது. புகுத்திய விஷயங்கள் உறுத்த ஆரம்பித்தவுடன், இப்போதெல்லாம் natural and alternate energy பற்றி யோசிக்கிறோம். ஒவ்வொரு generation’க்கும் ஒவ்வொரு பிரச்சனை. நமக்கு இது. தீர்க்கிறோமோ இல்லையோ, முடிந்தவரை முயன்று தள்ளிபோடலாம்.
2008-Planet Earth நல்லபடியாக, நலமாக இருக்க வாழ்த்துக்கள்.

கமல் கவியரங்கம்

(Thanks – behindwoods)
தலைப்பில் கமல். அப்போது இவர் தான் நடுவரா? தசாவதாரத்தில் விட்டுவிட்ட அவதாரத்தை இங்கே அரங்கேற்றுகிறாரா (கிட்டதட்ட 200 கவிதைகள் எழுதி இருப்பதாக யாரோ எப்போதோ சொன்ன நியாபகம். விகடனில் இவர் எழுதிய கவிதைகள் எப்போதும் சூப்பர் ரகத்திலேயே எனக்கு பட்டது).

Vijay Tv – கவியரங்கம் பார்க்க மக்கள் வருகிறார்களோ இல்லையோ, தசாவதார மேக்கப் இல்லாத கமலை பார்க்க கன ஜோராக கூட்டம் கூடும்.


நீ நெருங்கும் போதே
கரண்ட் ஏறுதே
உங்க ஊரு
கல்பாக்கமா?

நரம்பெல்லாம்
முறுக்கேறுதே
ஏண்டி நீயும்
மணப்பாறையா?

அழகிய தமிழ் மகனில் இப்படி வார்த்தைகள் வடித்து விட்டிருக்கிறார் நா. முத்துகுமார். இந்த பாட்டில் ரஹ்மான் சாயல் அடிக்கவில்லை என தோன்றுகிறது (’நீ நாதஸ்வரம் போல வந்தால் நாபிகமலம் நானா, நீ ஏழு ஸ்வரம் போல வந்தால் எட்டா ஸ்வரம் நானா’ தவிர). ஆனால், படத்தில் எனக்கு பிடித்த பாடல் இது மட்டும் தான். அசத்தலான நரேஷ் ஐயர். ரஹ்மானின் செல்ல பிள்ளை என்பது சரியாய் தானிருக்கிறது. நடுவில் வரும் கோரஸும் அழகு. பாட்டு முழுவதும் fresh feel. உஜ்ஜயினின் (பெண் பாடகி) முதல் வரிகள் அடிக்கடி கேட்பீர்கள். நீங்கள் இந்த பாட்டு கேட்கும் போது, பக்கத்தில் யாருமிருந்தால், தலையை முன்னும் பின்னும், இசைக்கு தோதாக ஆட்டி விடுங்கள். இல்லையென்றால், நீங்கள் ஏதோ சோகத்தில் இருப்பதாய் நினைத்து விட வாய்ப்புண்டு. நா. முத்துகுமார் வரிகள் சூப்பரென பலர் சொல்லி கேட்டதில், பெரிதாய் இருக்கிற மாதிரி எனக்கு தெரியவில்லை.

எல்லா புகழும் – முதல் பாடலை ரஹ்மான் பாடியிருக்கிறார். திப்புவோ, ஷங்கர் மஹாதேவனோ பாடியிருந்தால் தேவலாமோ என தோன்றியது. பாடல் நன்றாக இருந்தாலும், ரஹ்மான் குரல் விஜய்க்கு சரியாகுமா என தெரியவில்லை (தலைவருக்கு சரியாகியதே என்றால் – அதுவும் இல்லையென்பது என் கருத்து). பாடலாக அது கலக்கல். ஆனால், விஜய்யின் முதல் பாடலாக, ரஹ்மானின் குரல், கொஞ்சம் இடிக்கிறது.

மற்றபடி, மிச்ச சொச்ச பாடல்களை அடிக்கடி கேட்டு பிடிக்க வைத்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.

சொல்ல வேண்டிய விஷயம் – இந்த படத்தில் ஷ்ரேயாவின் TRP ரேட்டிங் எகிற போவதில் விஜய்க்கே சந்தேகம் இருக்காது.

Taj Madras Flight kitchen

(courtesy: The Hindu)

Today’s Metro Plus Chennai (of The Hindu) had an article about Taj Madras Flight Kitchen. Article rounds up the kitchen with the author and tells you what they do and what makes them special. The regular walk the factory one.

During Chennai days, having office at Tambaram and home at Guindy, made me to pass thru airport everyday. Most of the times the “unit” train would take me up & down. Had a colleague living in central Chennai. He would drop me at Guindy every evening and we bike thru GST. There comes the Taj Kitchen, serve the flights depart from Chennai Anna & Kamaraj terminals.

The few seconds passing of that place still reminds the tasty food-mixture substance smell, cooking inside the hard glass and the people with white thing on their head.

Article says, they serve 11K meals every day. Not a big number, if that is not a day to day one. The Taj brand says it all. Quality – Nutritious – Costly.

Wonderful part would be their work style. Many times, cooking for myself alone will make my kitchen messy & cleaning would take the equal amount of time as cooking. They have to be on time with no defects, to be in business. Defect(s) would be a costly mistake on air. That brings down the scale in their & the carrier’s brand. Article is missing to mention how long they are in the air meal business. I know it for 4 years. Handling the international customers for ~4 years in terms of food is something not exceptional but definitely the best.

I like the one, where Chef Kannan says, they serve Regional Food in domestic carriers (sometimes to International carriers also – I did taste Uppuma in Singapore airlines from Chennai – Singapore). I tend to eat the direct from stove Idli, Dosa, Uppuma, Pongal and like. Of course, many. Taj guys can’t parallel it, but, they atleast good in leveling the taste.

Scientific and systematic – key for their 24 X 7 support & success.

Boo

I vote this tiny girl as #1, named as Boo in the Pixar film Monsters, Inc. She tanks the wonderful smile or fear or crankiness on her eyes. Sulley, lucky you!!! Buzz lightyear is not that cute as Boo. But, animated character is numbered #1 not just by being cute, its been selected with umpteen picks. Jack, equivalently cute as Boo. Remy – the Ratatouille chef doesn’t catch the list though.

Here, you get the Top 20 Pixar characters, selected by some of the fellow netizens. Watch out for the Toon Trivia – interesting bits for every Pixar’ians.

ஆல்பிரட் நோபல்

ஆல்பிரட் நோபல் மீது எப்போதுமே எனக்கொரு கண் இருந்ததுண்டு. ஆச்சரியம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அனுதாபம் தான். இவர் கடைசி காலத்தில் என்னடா இப்படி செய்து விட்டோமே என வருந்தி இருக்க ஏக காரணங்கள் உலகம் அறிய உண்டு.

டைனமைட் போன்ற குட்டிசாத்தானை உலகத்திற்கு பிரசவித்து விட்டு, நல்லது செய்யும் என கற்பனை கண்டுவிட்டார் இந்த அறிவியல்வாதி. இவர் இருந்த காலம் (1833 – 1896), அறிவியலை மக்கள் அரியணையில் வைத்து பார்த்து கொண்டிருந்த நேரம். எதை கண்டுபிடித்தாலும் அது பரபரவென பற்றி கொண்டிருந்தது. இவரின் அப்பாவும் அறிவியல்வாதி. குடும்ப தர்மத்தின்படி அதே படியில் பயணித்துவிட்டார். நைட்ரோகிளிசரினின் வேதியியல் மாற்றத்தை, வெடி மாற்றமாக பூலோகத்திற்கு அறிமுகபடுத்தியது 1867. அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆயுத கலாச்சாரம் நாடுகளின் நாகரீகமாகி போனது. இரண்டு உலக போருமே இதற்கு பிறகு நிகழ்ந்தது தான். கை துப்பாக்கியை வைத்து எத்தனை பேரை சுட்டு விட முடியும். டைனமைட் போன்ற வஸ்த்துக்கள், அதன் பரிணாம வளர்ச்சி பெற்ற அதன் அண்ணன்கள், உலக போரை முடிந்த வரை வளர்த்து விட்டார்கள்.

நோபலின் கடைசி காலம், அவ்வளவாக திருப்தியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. தன் சொத்து பத்து பதினொன்றை எல்லாம் தன் பெயரிட்ட பரிசுக்காக நேர்ந்து விட்டதில் இருந்தே அது தெரிந்திருக்கும். அவர் விட்டு சென்ற போது 4,223,500 USD என்று விக்கிபீடியா கணக்கு சொல்கிறது. அப்துல் கலாமிடம் எவ்வளவு சொத்திருக்கிறது என்று கணக்கு கேட்டால், அவரே, ‘காமெடி பண்ணாதீங்க’ என்று ஹாஸ்யம் செய்வார்.

அந்த காலத்தில் எத்தனை பேர் நோபலை எள்ளி நகையாடினார்களோ தெரியவில்லை. பெரிதாய் பாதிக்கபட்டு தானபிரபு ஆகிவிட்டார். இப்போது நோபலை பெற பெரும் போராட்டம். பல சமயங்களில் இவர்கள் பரிசை அறிவிக்கும் போது, சில பல இணை துணை அறிவியல்வாதிகள், எலக்கியவாதிகள், அமைதிவாதிகளுக்கு (எளிதாக – பரிசு கிடைக்காதவர்களுக்கு) டாப் டூ பாட்டம் எரிவதாய் மீடியா எழுதி தள்ளுகிறது. எத்தனை எத்தனை அரசியலோ?

2007. நோபல் பரிசில் அல் கோர் அமைதிக்கான பரிசை அலேக்காக அள்ளி விட்டார். கூடவே IPCC (Intergovermental Panel on Climate Change) என்ற அமைப்பும். அவர்களும், அல் கோரும் ஒரே நேர் கோட்டில், பூமி பந்தை பச்சை பந்தாக மாற்ற கூவி கூத்தாடி கொண்டிருக்கிறார்கள். IPCC சேர்மேன் ஒரு இந்தியர் போல. ராஜேந்திர பச்சொரி. பச்சை வெஜிடேரியனாம். இதுவும் விக்கிபீடியா உபயம். இந்தியன் ஆயிலில் சில காலம் பழம் தின்று கொட்டை போட்டிருக்கிறார். இந்த நோபல் பரிசுக்கான அந்தஸ்த்தை தன் விஞ்சானிகளுக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார்.

மற்றபடி, இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் மருத்துவம் பெரிதாய் ஈர்க்கவில்லை. அதை ஏதாவது இந்தியர் வாங்கியிருந்தால், வெடி வெடித்து கொண்டாடி, ‘ஆமாம், யாரு இவங்க’ என்று வெடியின் புகை அடங்கியபின் கேட்டிருப்போம். 15 வருடம் கழித்து புத்தகத்தில் பதித்து, நம் சந்ததிகள் மாங்கு மாங்கென, புத்தகத்தில் தலை மோதி மனபாடம் செய்திருப்பார்கள்.

பழைய பதிவுகள் »